உனை நினைவூட்டும்
ஜன்னலோரப் பயணங்களை
தவிர்க்க நினைத்தாலும்
வாய்த்தும் கனத்தும்
விடுகின்றன சமயங்களில் ...
தூரத்து மலையும்
தாழ மிதக்கும் மேகமும்
திறந்தே வைக்கிறது
பிரியங்களின் வாசனைகளை ...
சதா ஏதோ ஓர் பாடலை
முணுமுணுக்கும் மழையும்
இன்று ஏனோ நமக்கான
பாடலையே இசைக்கிறது ...!!!
No comments:
Post a Comment