காலை குளிருக்கு பயந்து வீட்டின் வாசல் திறக்காமல் வேலைகள் அனைத்தும் முடிந்தது.இனி சற்று நடப்பதா இல்லை இன்னும் சிறிது வெளிச்சம் வரும்வரை முகநூலுக்கு போகலாமா என்ற யோசனையில் அலைபேசியை கையில் எடுத்து அமர்கிறேன்.
ஜன்னல் கம்பில் வந்து அமரும் சிட்டுக்குருவி கவனம் ஈர்க்கிறது .அதனிடம் ஏன் குளிர், மழை பற்றிய முணுமுணுப்பு இல்லை என யோசிக்கிறேன்.
பறவைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதன் பறத்தல் மட்டும் இல்லை போலும் .அதன் இடைவிடாத பயணம், தடை தாண்டிப் போகும் அதன் முயற்சி , இயல்பு மாறாத அதன் களிப்பு யாவும்தான்!
பறவை கிளைகளை
நம்பி அமர்வதில்லை....
தன் சிறகுகளை நம்பி .....
ஜன்னல் கம்பில் வந்து அமரும் சிட்டுக்குருவி கவனம் ஈர்க்கிறது .அதனிடம் ஏன் குளிர், மழை பற்றிய முணுமுணுப்பு இல்லை என யோசிக்கிறேன்.
பறவைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதன் பறத்தல் மட்டும் இல்லை போலும் .அதன் இடைவிடாத பயணம், தடை தாண்டிப் போகும் அதன் முயற்சி , இயல்பு மாறாத அதன் களிப்பு யாவும்தான்!
பறவை கிளைகளை
நம்பி அமர்வதில்லை....
தன் சிறகுகளை நம்பி .....