Thursday 8 October 2015

லவ் யூ யவனி...

மழைக்கு முன் உணரும்
ஓர் அடர் வெக்கையெனவும்
சிவந்து போன அந்திவானமாய்
அயர்ந்து போய் அரூபமாய்
சுழற்றியடிக்கும்
எண்ணங்களுக்கிடையில் ...

அவள் பின்னங்கழுத்தின் கீழான
பூனைமுடிப் பிரதேசங்களில்
முகம் புதைத்துக் கொள்கிறேன் ...

திரும்பாமல் அனிச்சையாய்
கை பற்றி கோர்த்துக்கொள்ளும்
நொடிகளில் மனத்துரு உதிர்த்து
கதை பேசத் துவங்குகிறேன்
தேவதையின் சிறகேறி...

#லவ் யூ யவனி ...

No comments:

Post a Comment