கடக்கும் ஐந்து விநாடிகளில்
நம் பால்யத்தை
மீட்டெடுத்து விடுகிறது
நம் பள்ளிக்கூடம் ....
நாம் வழக்கமாய் அமர்ந்துண்ட சரக்கொன்றை மரமும் ...
நம் சண்டைகளையும் சமாதானங்களையும் இன்றுவரை வெளிச்சொல்லா மாதா சிலையும் ...
உனக்காய் நான் தினம் காத்திருக்கும் இடத்திலிருந்து உன் வீடு நோக்கிப் பிரியும் சாலையும் ...
என ஏதும் மாறாமல் இருக்க
இங்கு உனக்கான ஓர்
வாழ்த்துச் செய்தியோடு
பால்யத்தை கடந்து விட்டிருக்கிறேன் நான் ...
நம் பால்யத்தை
மீட்டெடுத்து விடுகிறது
நம் பள்ளிக்கூடம் ....
நாம் வழக்கமாய் அமர்ந்துண்ட சரக்கொன்றை மரமும் ...
நம் சண்டைகளையும் சமாதானங்களையும் இன்றுவரை வெளிச்சொல்லா மாதா சிலையும் ...
உனக்காய் நான் தினம் காத்திருக்கும் இடத்திலிருந்து உன் வீடு நோக்கிப் பிரியும் சாலையும் ...
என ஏதும் மாறாமல் இருக்க
இங்கு உனக்கான ஓர்
வாழ்த்துச் செய்தியோடு
பால்யத்தை கடந்து விட்டிருக்கிறேன் நான் ...
No comments:
Post a Comment