Thursday 8 October 2015

வழியும் ப்ரியங்கள் ...

பொத்திப் பொத்தி
வைத்துக்கொள்வேன்
உன்மீதான அன்பை
என்னால் நீ என்னுள்
விழுந்துவிடக்
கூடாதென்று ...

இருந்தும் என்னிலிருந்து
எப்போதாவது பெருகி
வழிந்து விடுகிறது...
உன்னுடைய  ம்ம் க்களிலும்... அப்படியாக்களிலும்...!!!

வழியும் ப்ரியம்
கொண்டே நிரப்பிவிட
முயல்கிறேன்
தூர இடைவெளியை....

ப்ரியங்கள்  வழிந்துகொண்டே நிரம்பிவிடுகிறது
நமக்கான இடைவெளிகள்....!!!

No comments:

Post a Comment