Wednesday 15 April 2015

வருண் தங்கம்......

இன்றுடன் வருண் குட்டி பிறந்து சரியாக ஆறு மாதங்கள் ஆகிறது. அவனை கொஞ்சிக்கொண்டிருப்பது அலாதி ப்ரியம் . சில நாட்கள் பார்க்காமல் இருந்தாலும் அவன் எங்கள் ஊரில் இருந்ததே திருப்தி எனக்கு.

     எவ்வளவு குழந்தைகளை கொண்டாடி இருப்பினும் பிறந்த மறுநிமிடம் கையில் ஏந்தியது வருண் தங்கத்தை மட்டுமே.

    கைகளில் வெம்மையும் வெதுவெதுப்புமாய் நிறைந்திருந்தான்.என்னைப்போல் அவனும் உணர்ந்து கொண்டானோ தெரியவில்லை பால் வெண்மையான கண் திறந்து என் முகம் பார்த்தான்.

     அடர் ரோஜா நிற உதடுகள் , வெளிர் ரோஜா நிற கன்னம், பஞ்சு போல் காது, உதட்டில் ஒளிந்திருந்த சிரிப்பு என அதுவரை கௌரிக்காக நான் பட்ட பதட்டதினை மறக்கச் செய்திருந்தான்.

     சின்னஞ்சிறு விரல்களால் என் கைவிரல்களை இறுகப் பற்றி என்னை எடைகளற்றவளாய் மிதக்கச் செய்திருந்தான்.இன்று அவன் ஊருக்கு சென்று விட்டிருந்தாலும் அவன் வெம்மையும் அவன் இல்லாத வெறுமையும் கைகளில் ஓட்டக்கொண்டிருக்கிறது.

1 comment: