Sunday 5 July 2015

இங்குதானே இருக்கிறேன்

இங்குதானே இருக்கிறேன் ....

இலக்கற்று நீ இறகாய்
அலைந்து கொண்டிருக்கையில்
காற்றாய் ....

காற்றால் உலுக்கப்பட்டு
சிணுங்கும் கிளைகளாயிருக்கையில்
உனைத்தாங்கும் வேராய் ...

வேராய் நீ
வலிகொண்டிருக்கையில்
உனை நனைக்கும் மழையாய் ...

பிரவாகமாய் நீ
வெளிப்படுகையில்
உடைபடும் கற்களாய் ....

உன் பயணங்களில்
நீ ரசிக்கும்
ஜன்னலோர இருக்கையாய் ...

உன் கவிதை பக்கத்தில்
நீ அடையாளமிட்ட
மயிலிறகாய்...

என்னைத்தேடி நீ
வெளியெங்கும் அலைகையில்
உன்னில் தொலைந்தவளாய் ....

இங்குதானே இருக்கிறேன் ...