Thursday 8 October 2015

கவண் பொருந்திய சொற்களை ...

இப்போதைக்கு
பட்டாம்பூச்சியின்
சிறகுடைக்க
நீயற்று நனையும்
மழைத்துளியே
போதுமானதாயிருக்கிறது ...

உன் கவண் வில்லில்
பொருந்திய சொற்களை
பத்திரப்படுத்து
பிறிதொரு கார்காலமற்ற
கடின பொழுதுகளுக்காய்... !!!

No comments:

Post a Comment