Thursday 8 October 2015

பச்சையங்கள் கூடித்திரியும் மனது

மனக்குருதி பருகக்
காத்திருந்த யட்சங்கள்
ஏமாற்றமடைந்தே
சபிக்கின்றன ...

ரணங்கள் கீறக் காத்திருந்த
ஆயுதங்களெங்கும்
துருவென படர்ந்திருந்தன
தோல்வியின் சாயங்கள்...

மண்டியிட வேண்டிய
அவசியமின்றி ஆழ்கடல்
மௌனமென இதயத்தின்
நான்கு அறைகளும் ...

இலைகள் உதிர்தலை
ஏற்றுக்கொள்ளும்
மரமென பச்சையங்கள்
கூடியே திரிகிறது மனது ...

தணிப்பதற்காய் வந்த மழை
தணித்தே செல்கிறது ...
திரியும் இந்நிலவும்
தூவியே செல்கிறது சௌந்தர்யங்களை ....!!!

No comments:

Post a Comment