Friday 9 October 2015

கல் வனமாய் ....

பிரிவினை அறிவித்துக்கொண்டே
இருக்கிறாய்...
பறவையின் சிறகென
உதிரச்செய்யவே
பெருமுயற்சி கொள்கிறாய் ...

ஊடுறுவும் குளிர் பனியில்
இறுகப் பற்றும் போர்வை போல
உருகிக் கசியும் துயர்தனை
அழுந்தப்பற்றிக் கொல்கிறது நினைவு...

உன்னிலான என் ப்ரியங்களின்
மீதான வனமெங்கும்
அழுந்த எழுப்புகிறாய்
பிரிவுகளின் நெடிதுயர்ந்த மதில்களை...

எதைக்கொண்டும் உடைக்க
எத்தனிக்காது வலிநுகர்ந்தபடியே
உன் அரணுக்குள் உறைகிறேன்
ஓர் கல்வனமாய் ...!!!

No comments:

Post a Comment