Friday 9 October 2015

ரக்‌ஷா பந்தன் ....

அண்ணணின் பத்தாத சட்டைகளை நாகரீக உடையென போட்டுத் திரிந்திருந்த தினங்களும் ...

அவன் ஹீரோவாய் வலம் வந்த ஹெர்குலிஸ் என்னுடையதாய் மாறியிருந்த தினமும் ...

என் சிரிப்புகளுக்காய் தாயக்கரங்களில் பகடைகளை தெரிந்தே பலி கொடுத்திருந்த தினங்களும் ...

மாமன் மகள்களுக்கிடையில் ஒற்றையனாய் சிக்கிக்கொண்டு குறுவெட்கத்தோடு மாட்டியிருந்தவனை ரசித்திருந்த தினங்களும் ...

தகப்பனாய் நின்று கரம் பிடித்து கொடுத்தவன் தோள்சாய்ந்து நான் மட்டுமே அழுது கிளம்பிய தினமும் ...

கண்விழித்து காண்கையில் கையில் மகளை ஏந்தியவண்ணம் அழுது சிவந்திருந்தவனை உருகியவண்ணம் கண்ட தினமும் ...

என இவ்வாறான தினங்கள் இவ்வளவு எளிதாய் வருடம் ஒருமுறை நினைவூட்டும் இந்நாளைப்போல வாய்த்துவிடுவதில்லை ...

No comments:

Post a Comment