அதிகாலையை இசையோடு துவங்குதல் பெரும்வரம்.எனக்கு பிடித்த பாடல்களை கோர்வையாக கேட்டுக் கொண்டு ஒவ்வொரு நாளினையும் துவங்குதல் எனக்கு பிடித்தமான ஒன்று.நல்ல இசை மனதை தூய்மையாக்கி சந்தோஷத்தினை கையளிக்கவல்லது.
தத்தளிக்கும் வெற்றுப்படகினை, திசை மாற்றி ஆற்றின் போக்கோடு நகர்த்துதல் போன்றதே இசையோடு பயணித்தலும்.
மிருதுவான நூலைக்கொண்டு பலவண்ணமயமான உடையை நெய்து காட்டுவதுபோல இசையும் வெவ்வேறு விதமான உணர்வுகளை நமக்குள் விதைத்துவிடுகின்றது.
தேங்கிய உணர்வுகளை அசைத்து வெளியில் சொட்டிவிடச் செய்யும் கலை இசை அறிந்ததில் ஒன்று.கண்ணீரையும் சிறகுகளையும் நினைத்த மாத்திரத்தில் தரவல்லதும் இசைதானே.
ஒர் நொடியில் புல்லாங்குழலையும், சகல மனிதர்களின் சோகங்களையும், வாசனைகளையும் தரவல்ல இசையினை ரசிப்பதை விட அதனிடம் என்னை ஒப்புக் கொடுத்து அதில் நனைதலே சுகம்...
தத்தளிக்கும் வெற்றுப்படகினை, திசை மாற்றி ஆற்றின் போக்கோடு நகர்த்துதல் போன்றதே இசையோடு பயணித்தலும்.
மிருதுவான நூலைக்கொண்டு பலவண்ணமயமான உடையை நெய்து காட்டுவதுபோல இசையும் வெவ்வேறு விதமான உணர்வுகளை நமக்குள் விதைத்துவிடுகின்றது.
தேங்கிய உணர்வுகளை அசைத்து வெளியில் சொட்டிவிடச் செய்யும் கலை இசை அறிந்ததில் ஒன்று.கண்ணீரையும் சிறகுகளையும் நினைத்த மாத்திரத்தில் தரவல்லதும் இசைதானே.
ஒர் நொடியில் புல்லாங்குழலையும், சகல மனிதர்களின் சோகங்களையும், வாசனைகளையும் தரவல்ல இசையினை ரசிப்பதை விட அதனிடம் என்னை ஒப்புக் கொடுத்து அதில் நனைதலே சுகம்...
இனிமையான துவக்கம்...! வலையுலக வருகைக்கு இனிய நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete