அப்பா என்ற உறவை இப்படித்தான் இருந்திருக்கக்கூடும் என உணர்வாய் உணர்ந்திருக்கிறேனே ஒழிய அனுபவப்பூர்வமாய் உணர்ந்ததில்லை.அப்பாவின் பத்திரப்படுத்தப்பட்ட துணிகளிலும், டைரிகளிலும், தொங்கு மீசையில் கர்வத்துடன் சிரிக்கும் போட்டோக்களிலும் கண்டிருக்கிறேன் அப்பாவை .
அப்பாவின் உயிரின் துளியில் விதைக்கப்பட்டும் ஆதரவாய் பொத்தி வளர்க்கப்பட்ட வரம் வாய்க்கப்பெறவில்லை. அப்பா கை பிடித்து பள்ளிக்கும் , கால் பிடித்து மணவறைக்கும் சென்றதில்லை.
ஒவ்வொருமுறையும் அப்பாவிற்கு திதி அளிக்கையிலும் பொண்ணா பிறந்து திதி குடுக்கறா பாரு அப்பனைப் போலவே தெனாவட்டு என்போரின் வசவுகளிலும், ராஜ் அண்ணா போலவே குரலும் தெளிவும் என்ற அத்தைகளின் பாராட்டுகளிலும், அப்பனைப் போலவே எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு என் உயிர வாங்க பொறந்திருக்கு பாரு என்ற அம்மாவின் புலம்பல்களிலும் கண்டிருக்கிறேன் அப்பாவை.
என் பிள்ளைகள் இன்றைக்கு பள்ளி கிளம்புகையில் எல்லாம் அடிக்கடி அம்மா சொல்வது உங்க தாத்தா அந்தகாலத்துலயே ஏற்காடு மான்போர்ட் ஸ்கூல்ல படிச்சாரு தெரியுமா ? சென்ற வருடத்தில் ஓர்நாள் அம்மா நாளைக்கு ஏற்காடு பிக்னிக் போறோம் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பிட்டாங்க. அப்பா படிச்ச ஸ்கூல் வாழ்ந்த எஸ்டேட் எல்லாம் பாத்துட்டு வந்ததும் அம்மா ரெண்டுநாள் இருந்த அமைதி பயத்த உண்டாக்கிடுச்சு.
உனக்கு சாவித்ரினு பேர் வைக்கனும்னு கெஞ்சுனேன் உங்கப்பாட்ட அப்புறம் எல்லோரும் சாவி சாவி என் பொண்ண கூப்பிடுவாங்கன்னு சக்தினு வச்சாரு அப்டின்னு இன்னமும் சலிச்சுப்பாங்க அம்மா. அண்ணணும் இறந்துபோன இரண்டாம்நாளில் நீ கூட என் பையன காப்பாத்தி குடுக்கலயேன்னு அப்பாவ திட்டிட்டே பழைய டிரங்கு பெட்டில இருந்த அவரோட பொருள் அவ்வளவையும் அம்மா தீயிட்டு கொளுத்துனப்பாதான் அப்பா செத்துப்போனதா நினைச்சு முதன்முதலா அழுக வந்துச்சு .
முதிர்ந்த மரத்தின் வேர்கள் போல் மண்ணில் ஊன்றவும் பெருத்த பறவையின் சிறகுகள் போல் விண்ணில் அலையவும் என் தகப்பன்தான் கற்றுக்கொடுத்தான் அப்படின்னு எங்கயோ படிச்சுருக்கேன். அந்த விஷயத்துல என் பொண்ணுங்க மாபாக்யசாலிங்க.
அப்பாவின் உயிரின் துளியில் விதைக்கப்பட்டும் ஆதரவாய் பொத்தி வளர்க்கப்பட்ட வரம் வாய்க்கப்பெறவில்லை. அப்பா கை பிடித்து பள்ளிக்கும் , கால் பிடித்து மணவறைக்கும் சென்றதில்லை.
ஒவ்வொருமுறையும் அப்பாவிற்கு திதி அளிக்கையிலும் பொண்ணா பிறந்து திதி குடுக்கறா பாரு அப்பனைப் போலவே தெனாவட்டு என்போரின் வசவுகளிலும், ராஜ் அண்ணா போலவே குரலும் தெளிவும் என்ற அத்தைகளின் பாராட்டுகளிலும், அப்பனைப் போலவே எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு என் உயிர வாங்க பொறந்திருக்கு பாரு என்ற அம்மாவின் புலம்பல்களிலும் கண்டிருக்கிறேன் அப்பாவை.
என் பிள்ளைகள் இன்றைக்கு பள்ளி கிளம்புகையில் எல்லாம் அடிக்கடி அம்மா சொல்வது உங்க தாத்தா அந்தகாலத்துலயே ஏற்காடு மான்போர்ட் ஸ்கூல்ல படிச்சாரு தெரியுமா ? சென்ற வருடத்தில் ஓர்நாள் அம்மா நாளைக்கு ஏற்காடு பிக்னிக் போறோம் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பிட்டாங்க. அப்பா படிச்ச ஸ்கூல் வாழ்ந்த எஸ்டேட் எல்லாம் பாத்துட்டு வந்ததும் அம்மா ரெண்டுநாள் இருந்த அமைதி பயத்த உண்டாக்கிடுச்சு.
உனக்கு சாவித்ரினு பேர் வைக்கனும்னு கெஞ்சுனேன் உங்கப்பாட்ட அப்புறம் எல்லோரும் சாவி சாவி என் பொண்ண கூப்பிடுவாங்கன்னு சக்தினு வச்சாரு அப்டின்னு இன்னமும் சலிச்சுப்பாங்க அம்மா. அண்ணணும் இறந்துபோன இரண்டாம்நாளில் நீ கூட என் பையன காப்பாத்தி குடுக்கலயேன்னு அப்பாவ திட்டிட்டே பழைய டிரங்கு பெட்டில இருந்த அவரோட பொருள் அவ்வளவையும் அம்மா தீயிட்டு கொளுத்துனப்பாதான் அப்பா செத்துப்போனதா நினைச்சு முதன்முதலா அழுக வந்துச்சு .
முதிர்ந்த மரத்தின் வேர்கள் போல் மண்ணில் ஊன்றவும் பெருத்த பறவையின் சிறகுகள் போல் விண்ணில் அலையவும் என் தகப்பன்தான் கற்றுக்கொடுத்தான் அப்படின்னு எங்கயோ படிச்சுருக்கேன். அந்த விஷயத்துல என் பொண்ணுங்க மாபாக்யசாலிங்க.
கலங்கினேன்...
ReplyDeleteநானும் உங்கள் அம்மா போல் கணவனையும் என் உயிர் என் theyvam kaarththi makanaiyum izhanthaval. உங்கள் ammaavin kopam sariyaanathe.kadavul enru oruvar irunthaal ippadi spthanaikalai niruththik kollattum.
ReplyDeletekaarththik அம்மா
kalaa kaarththik