Wednesday 8 April 2015

பலூன்

உலக அதிசயங்களில் ஒன்றைப் போலவே என் கண்களுக்கு பலூன் தோன்றும்.எல்லோரிடமும் அப்படி ஒன்றானதாகவே காண்பிக்கவே பால்யங்களில் மனம் விழையும்.

சிறுமிகளை தேவதைகள் ஆக்கும் கலை பலூன் அறிந்த ஒன்று. பலூன் பறக்கத் துவங்கியதும் அதனுடன் மனமும் சேர்ந்தே மிதக்கத் துவங்கி விடுகிறது .

பால்யத்தின் கண்களுக்கு பலூன்காரன் மீட்பனாகவே காட்சியளித்தான்.கைகளில் வாங்கியதும் கால்கள் வீட்டில் நிற்பதில்லை.தெருக்கள் முழுதும் அதனுடன் சுற்றியலைந்தே நேரம் கழியும்.

உடைந்த பலூன் துண்டுகளை தேடி எடுத்து மீண்டும் பலூன் ஆக்கும் முயற்சியும், ஆசைகள் வெடித்துப் போகும் தருணங்களின் வலிகளையும் பால்யத்தில் கற்றுத் தந்ததும் பலூன்தான்.

பலூன் மீதான பார்வை யாவர்க்கும் ஒன்றானதாக இல்லாவிடினும், உடைந்து விட கூடாது என ஏங்கும் மனதும் அதன் இயல்பை மாற்றிக்கொள்ளாத பலூனும் வாழ்க்கைப்பாடங்களில் ஒன்றாகவே தெரிகிறது .


   





1 comment: