Sunday 5 April 2015

பனைகளுக்கு நடுவில்.....

பனைகளுக்கு நடுவில்
     ஒளிந்து கொள்கிறாய்
அலைகளை போல ஒன்றுடன்
     ஒன்று கட்டிப் புரள்கிறாய்....

தண்ணீரின் மீது ஊர்ந்து
      நனையாமல் கடக்கிறாய்
எட்டிப் பிடிப்பதற்குள்
      கடந்தோடி விடுகிறாய்.....

கலைவதும் கூடுவதுமாய்
      என்ன அங்கே பேச்சு
எந்த நூற்றாண்டுகளின் கதையை
      பேசிக்கொள்கிறீர் மேகங்களே?....

1 comment: