Thursday 23 April 2015

அசைப்பதை கூட....

அசைப்பதைகூட நிறுத்தி
உறைந்து போன
தொட்டிச்செடிகள்....

கருமையும் தூசியும்
படிந்து பலவீனமாய்
நிற்கும் நாவல்மரம்....

வால்பேப்பரில் மட்டுமே
கொட்டிக் கொண்டு
இருக்கும் அருவி.....

இவ்வாறான நகரின்
அலுவலகத்தில்
நான் மட்டும் எப்போதும்
பசுமை கோப்பைக்குள்....

2 comments: