Thursday, 23 April 2015

அசைப்பதை கூட....

அசைப்பதைகூட நிறுத்தி
உறைந்து போன
தொட்டிச்செடிகள்....

கருமையும் தூசியும்
படிந்து பலவீனமாய்
நிற்கும் நாவல்மரம்....

வால்பேப்பரில் மட்டுமே
கொட்டிக் கொண்டு
இருக்கும் அருவி.....

இவ்வாறான நகரின்
அலுவலகத்தில்
நான் மட்டும் எப்போதும்
பசுமை கோப்பைக்குள்....

2 comments: