Monday 11 May 2015

மிரண்ட விழிகளுடன்
தயங்கி நுழையும்
ஓர் பூனை போலவே
உன் கோட்டைக்குள்
பிரவேசிக்கிறேன் நான்......

நுழைந்த மறுநொடியில்
கபளீகரம் செய்யும்
அரக்கனாய் மாறி
உன் உரையாடல்களில்
விழுங்க விழைகிறாய் நீ .....

உன் நட்பை விரும்புகிறேன்
என்றுரைக்கும் கணத்தில்
சரியத் துவங்குகிறது
உன்னை மறைந்திருந்த
மாயக்கோட்டைகள்.....

No comments:

Post a Comment