Sunday 21 June 2015

வாழ்தலை அளிப்பள்

பாலையில்
தனித்திருப்பவனுக்கு
ஒற்றை மரம் தரும்
வாழ்வின் மீதான
நம்பிக்கையை
தருபவளல்ல அவள் ...

பற்றற்று
தனித்திருக்கையில்
நெற்றி கேசம் வருடி
முத்தமிட்டுச் செல்லும்
காற்றாய்
வாழ்தலை அளிப்பவள்
அவள்....!!!

1 comment: