Tuesday 21 April 2015

வானப் பெருவெளி ......

அன்பு கொண்டு
மொய்க்கும் கண்களுடன்
உன்னை கேட்கிறேன்
உனக்கு நான் யார்?
சொல் என்கிறேன் ....

நீ என் நினைவும் மறதியும்
அப்புறம்?....
நீ என் பசியும் தாகமும்
அப்புறம்?....
நீ என் வாழ்வும் உயிரும்
அப்புறம்?....
நீ என் நான் நானே நீ
அப்புறம்?....

இன்னும் என்ன சொன்னால்
திருப்தியுறுவாய் என்கிறாய்....
சிரிப்புடன் நகர்ந்தவளை
நீ சொல்லேன் என்கிறாய்....

ம்...நீ எனக்கு எல்லைகளற்ற
வானப் பெருவெளி....
நீ என் கரைகளற்ற
பெருங்கடல் .....

2 comments: